உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.


துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்டில் 19(18) ரன்களில் வெளியேற, மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் 55(77) ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து வந்த கேன் வில்லியம்ஸன் 30(53), டாம் லாத்தம் 47(56) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் நியூசிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.



நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்துள்ளது.  இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ், லெய்ம் புலுங்கெட் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.


இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது.