சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியிடம் இளம்பெண் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் 11-வது சீசனின் 7_வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.


இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் தனது சதத்தினை பூர்த்தி செய்தார். ரெய்னா 46 ரன்கள் குவித்தார். கேப்டன் டோனி உள்பட இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 


கேப்டன் டோனி 5(3) ரன்களில் வெளியேறினார், எனினும் ரசிகர்களிடம் எந்த கோவத்தினையும் அவர் பெறவில்லை. இதற்கு சான்றாய் அன்றைய போட்டியில் சென்னை அணி ரசிகர் ஒருவர் ஆடுகள பாதுகாவளர்களை தாண்டிச் சென்று டோனியில் காலில் விழுந்து ஆசிப்பெற்றார்.


இதேப்போல் ரசிகர்களின் மத்தில் இருந்த இளம்பெண் ஒருவர், தனது வருங்கால கணவருக்கும் டோனிக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். தனது கையில் வைத்திருந்த பதாகையின் மூலம் ‘என் எதிர் கால கணவரே என்னை மண்ணித்துவிட, MS டோனி தான் எப்போதும் என் முதல் காதலர்’ என குறிப்பிட்டு இருந்தார்.


இந்த காட்சியானது தொலைக்காட்சில் காண்பிக்கப்பட்டது, பின்னர் ட்விட்டர், பேஸ்புக் என அனைத்திலும் பகிரப்பட்டது. வைரலாக பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது!