பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து, எச்.எஸ். பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், டென்மார்க்கின் ஹன்ஸ்-கிரிஸ்டியன் விட்டிங்கசை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.


இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனா வீரர் வோங் விங் கீ ஆகியோர் மோதினர். கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 


பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் சயாகா தகாஹசியை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 21-13 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.