மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றனர்..
எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் இடத்தில் உள்ளது. 


முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த இரு போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. 


மறுபக்கத்தில், இலங்கை மகளிர் அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவி, வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


இன்று வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால், இந்திய அணி முழு உத்வேகத்துடன் விளையாடி வெற்றியைத் தொடரும். 


இலங்கை அணியைப் பொறுத்தவரை, இந்தத் தொடரில் நீடிக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


இந்தப் போட்டி பிற்பகல் மூன்று மணிக்கு தொடங்குகிறது.