ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-௦ என்ற கணக்கி வென்றது. 


தற்போது இருஅணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறும். 


இன்று (மார்ச் 2) இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.


 



20 ஓவர் தொடரை இழந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டியை வெற்றியுடன் இந்தியா அணி ஆரம்பிக்க வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.