ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இந்தியாவை விட 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்றைய முன் தினம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது, முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இந்திய அணி 158 ரன்கள் பின்தங்கி இருந்தது.


இந்நிலையில் நேற்று ஆட்டத்தின் மூன்றாம் நாள் துவங்கியது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அறிமுக போட்டியிலேயே ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அடுத்து ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்தியா 40 ரன்கள் பின்தங்கியது.


இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினார்கள். ஜென்னிங்ஸ் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து குக் உடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


அணியின் எண்ணிக்கை 62 ஆக இருந்த போது ஜடேஜா வீசிய சுழலில் 20 ரன்கள் அடித்திருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார், பின்னர் களமிறங்கிய கேப்டன் ரூட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து. குக் மற்றும் ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.


இந்நிலையில், மூன்றாம் நாள் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களுக்கு இங்கிலாந்து 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் குவித்துள்ளது. குக் 46 ரன்கள் மற்றும் ரூட் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.


இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவை விட இங்கிலாந்து 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.