மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில்  விளையாட டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சென்று சேர்ந்துள்ளது. வரும் 11-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அனைத்துப் போட்டிகளும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டிகளில் நிறைய புதியமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. முக்கிய வீரர்களான விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை.


ஜிம்பாப்வே அணி எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது புதிய வீரர்களுடன் ஆட உள்ளதால் ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த தொடர் இருக்கும் என  டோணி தெரிவித்துள்ளார்.