காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிகர் தவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கைக்கு எதிராக் காலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்க்ஸில் ஷிகர் தவன் 190 ரன்கள் எடுத்தார்.


இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை 78.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது. 


இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்சில் 53 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இலங்கை அணிக்கு வெற்றி பெற 550 ரன்கள் இலக்காக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.


இரண்டாவது இன்னிங்க்ஜை ஆடிய இலங்கை அணி 76.5 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் டெஸ்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.


இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்க்சில் 190 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்சில் 14 ரன்களும் எடுத்த ஷிகர் தவன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.