இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து, காயம் காரணமாக டூ பிளஸிஸ் விலகினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.


முன்னதாக, கடந்த பிப்., 1 ஆம் நாள் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் டூ பிளஸிஸ்-க்கு வலது கை விரலில் காயம் ஏற்பட்டது.


இதனையடுத்து அவரை சோத்தித்த மருத்துவர்கள் டூ பிளஸிஸ் 3 முதல் 6 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் டூ பிளஸிஸ், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்கா வீரர் ஃபர்ஹான் பெஹர்தின் களமிரங்குவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது!


இதற்கு முன்னதாக கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிரடி நாயகன் ஏபிடி வில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார். 


இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்த இடியாக டூ பிளஸிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்!