சிட்னி: கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (Cricket Australia) இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி (Nick Hockley) முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மாலத்தீவில் இருந்து ஐபிஎல் 2021 இல் இங்கு விளையாடிய ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் வீரர்கள் தேவையான 14 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் செலவுகளை பி.சி.சி.ஐ செலுத்துகிறது என்று அவர் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் (Australia) 38 பேர் கொண்ட அணியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் திங்கள்கிழமை சிட்னி (Sydney) விமான நிலையத்திற்கு வந்தனர். இந்த நபர்களில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற சிறந்த வீரர்களும், அதிகாரிகள் மற்றும் வர்ணனையாளர்களும் அடங்குவர். இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலிய அரசு மே 15 வரை பயணிகளை தடைசெய்தது, மேலும் ஆஸ்திரேலிய குழுவினர் மாலத்தீவில் 10 நாட்கள் தனிமையில் இருக்குமாறு கட்டாயப்படுத்தினர்.


ALSO READ | இந்த ஆண்டு IPL நடைபெறுமா? Rajasthan Royals உரிமையாளர் பகீர் தகவல்!


தனிமைப்படுத்தலின் (Quarantine) செலவுகள் குறித்து கேட்டதற்கு, நிக் ஹாக்லி சிட்னி மார்னிங் ஹெரால்டிடம், "ஆம், அவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் வீடு திரும்புவார்கள் என்று பி.சி.சி.ஐ ஆரம்பத்தில் ஒரு உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தது." நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். BCCI கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது என்று தெரிவித்தார்.


ஐபிஎல் 2021 (IPL 2021) இன் Bio Bubble இல் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்த பின்னர் பிசிசிஐ இந்த போட்டியை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆஸ்திரேலிய உறுப்பினர்கள் மாலத்தீவு வழியாக தங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR