ஜெய்ஷ்வால் அதிரடி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய இளம் வீரர் ஜெய்ஷ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்தில் அரசதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். குறிப்பாக, முதல் ஓவரை வீச வந்த நிதீஷ் ராணாவின் அந்த ஓவரில் 26 ரன்களை குவித்து பிரமாதப்படுத்தினார். முதல் 2 பந்தில் சிக்சர், அடுத்த 2 பந்தில் பவுண்டரி, 5வது பந்தில் டபுள்ஸ் மற்றும் கடைசி பந்தில் பவுண்டரி என விளாசி தள்ளினார்.இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 


மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?


அரைசதம் விளாசல் 


அத்துடன் ஜெய்ஷ்வால் நிறுத்தவில்லை. தொடர்ந்து பவுண்டரிகளை அடித்து, மிரள வைத்தார். இதன் மூலம் 13 பந்தில் ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுலின் சாதனையை 21 வயதான ஜெய்ஷ்வால் முறியடித்துள்ளார், புதியதொரு சாதனையை படைத்துள்ளார். அவரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் 98 ரன்களுடன் இருந்தார். 


பாராட்டிய விராட் கோலி


அவரின் ஆட்டத்தை விராட் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார். போட்டியை பார்த்த அவர் ஜெய்ஷ்வாலின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஜெய்ஷ்வால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ஆர்சிபிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு விராட் கோலியுடன் சிறிது நேரம் உரையாடிய அவர், அப்போது பெற்ற அறிவுரைகள் களத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ய உதவுவதாக பெருமிதமாக தெரிவித்துள்ளார்.


ரோகித் சர்மாவுக்கு வேண்டுகோள்


போட்டிக்குப் பிறகு பேசிய ஜெய்ஷ்வால், ஐபிஎல் தொடரில் சீனியர் வீரர்களின் அறிவுரைகள் தனக்கு மிகுந்த  நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். தோனி, விராட் கோலி, ரோகித்சர்மா, பட்லர் உள்ளிட்ட அனைவரும் தனக்கு நல்ல அறிவுரைகளையும், டிப்ஸ்களையும் கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஜெய்ஷ்வால் இந்திய அணியில் நம்பர் 3-ல் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கனவு என கூறியுள்ளார். உலக கோப்பைக்கான இந்திய அணியில் தன்னை அந்த இடத்துக்கு பரிசீலிக்குமாறு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது இந்திய அணியில் நம்பர் 3 இடத்தில் விராட் கோலி விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய இடத்துக்கு ஜெய்ஷ்வால் ஆசைப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | IPL 2023: தீபக் சஹாரின் தலையிலேயே போட்ட தல... தோனியின் என்ட்ரியால் எச்சரித்த ஆப்பிள் வாட்ச் - சுவாரஸ்ய சம்பவங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ