இந்தியா -  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பிரிம்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் ரிஷப் பன்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரின் ஆட்டத்தால் 416 ரன்களை குவித்த இந்திய அணி, இங்கிலாந்து அணியை 284 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அந்த அணியில் ஜானி பேரிஸ்டோவ் மட்டும் அதிரடியாக விளையாடி 106 ரன்கள் எடுத்தார். அவர் பொறுமையாக தான் ஆடிக் கொண்டிருந்தார். திடீரென விராட் கோலிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஆட்டத்தில் சூடேற்றிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காதல் முதல் கல்யாணம் வரை: இது தோனியின் காதல் கதை!


முதல் 65 பந்துகளில் 16 ரன்கள் மட்டும் எடுத்திருந்த பேரிஸ்டோவ், விராட் கோலியுடனான கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு 54 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அவருடைய ஆட்டத்தில் பொறி பறந்தது. பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அடிப்பதிலேயே குறியாக இருந்தார். வாக்குவாதத்தின்போது வாயில் ஜாலம் காட்டாமல் ஆட்டத்தில் காட்டுமாறு கோபமாக செய்கை செய்ததால், அதற்கேற்ப ஆட்டத்தில் காட்டுகிறேன் என பந்துவீச்சாளர்களை நொறுக்கினார்.



அவர் சதமடித்ததும், விராட் கோலியும் கைதட்டி பாராட்டினார். போட்டி முடிந்ததும் விராட் கோலி உடனான வாக்குவாதம் குறித்து பேசிய ஜானி பேரிஸ்டோவ், "இருவரும் எதிரெதிர் அணியில் ஆடுவதை சிறப்பாக பார்க்கிறேன். அவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பலருக்கும் ஐகானாக இருக்கிறார். ஆட்டத்தை சுறுசுறுப்பாக எடுத்துச் செல்வதில் வல்லவர். எங்களுக்கு இருவருக்கும் இடையில் நடந்தது ஒன்றுமில்லை. சாதாரணமான ஒன்று" என கூறினார்.


பேரிஸ்டோவின் இந்த பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடும். வெற்றி பெற்றால் 3க்கு 1 என்ற கணக்கில் வரலாற்று சாதனையுடன் கோப்பையைக் கைப்பற்றும். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. 4வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடி இமாலய வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. 


மேலும் படிக்க | ’பல்லை உடைப்பேன்’ ஆண்டர்சன் ஜடேஜா மோதலின் காரசாரமான பின்னணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR