டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் திறந்துவைக்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சினிமா, விளையாட்டு, அரசியல், பொதுச்சேவை போன்ற பல திரையில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம். இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. 


விராட் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கோலி தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐ.பி.எல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.