இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி நேற்றைய ஆட்டத்தில் இரண்டு சாதனகளை படைத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேட்டிங், விக்கெட் கீப்பர், தலைமைப் பொறுப்பு என அனைத்து பிரிவுகளிலும் சாதனைகள் பல குவித்துள்ளவர் மகேந்திர சிங் டோனி. இந்நிலையில் அவரது சாதனைப் பட்டியலை நீட்டும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேலும் இரண்டு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக கடந்த 12-ஆம் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ஜூலை 14-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் இப்போட்டியில் இந்திய வீரர்களின் சாதனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.


இந்த வகையில் மகேந்திர சிங் டோனி,. 10000 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும், 300 கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். 


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 319 போட்டிகளில் விளையாடியுள்ள டோனி 10 சதம், 67 அரைசதத்துடன் 9967 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், டோனி ஒருநாள் போட்டிகளில் 10004 ரன்கள் குவித்து 10000 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 


இவருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள், சவ்ரவ் கங்குலி 11363, ராகுல் ட்ராவிட் 10889 குவித்து டோனிக்கு முந்தைய இடம் வகித்து வருகின்றனர்.


அதேப்போல், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜோஸ் பட்லரின் கேட்சை பிடித்ததன் மூலம் டோனி தனது 300-வது கேட்சினை பதிவு செய்தார். இவருக்கு முன்னதாக ஆடம் கில்கிறிஸ்ட் 417, மார்க் பவுச்சர் 403, சங்கரகாரா 402 ஆகியோர் டோனிக்கு முந்தை இடத்தை தக்கவைத்துள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.