பிரிஸ்பேன்: முன்னாள் உலக நம்பர் ஒன் மரியா ஷரபோவா தனது 2020 பிரச்சாரத்தை பிரிஸ்பேன் இன்டர்நேஷனலில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊக்கமருந்து தடை விதித்ததில் இருந்து தொடர்ந்து தோள்பட்டை காயத்துடன் ஷரபோவா போராடி வருகிறார். இதன் காரணமாக இந்த ஆண்டு வெறும் எட்டு தொடர்களிலும் 14 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார், இதனால் அவர் உலக தரவரிசை பட்டியலில் 133-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.


ஆகஸ்ட் மாதம் நடந்த US Open-ல் 32 வயதான ரஷ்யன், தொழில்முனைவோரான போட்டியாளரான செரீனா வில்லியம்ஸிடம் முதல் சுற்று தோல்வியிலிருந்து விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நான் இளமையாக இருந்தபோது எனது 30 வயதிற்கு பின்னர் நான் விளையாடுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் தற்போது என்னுள் ஒரு நெருப்பு இருபதை நான் உணர்கிறேம். மேலும் என்னால் என் தொழில் முறையில் தொடர முடியும் என்றும் எதிர்பார்கிறேன். தோள்பட்டை ஆரோக்கியமாக இருக்கும் வரை, என் உடல் என்னை அனுமதிக்கும் வரை, நிறைய போட்டிகளில் எனது பங்களிப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


கூயோங் கிளாசிக் தொடரில் விளையாடுவதற்கு ஷரபோவா திட்டமிட்டுள்ள நிலையில், அவரது பிரிஸ்பேனின் செயல்பாடு அவருக்கு ஜனவரி 20 துவங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் போட்டியிட மற்றொரு வைல்டு கார்டைப் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்., "இது எனக்கு முடிவுகளைப் பற்றியது என்றாலும், நான் அன்றாடம் எப்படி உணர்கிறேன் என்பது பற்றியது, என் தோள்பட்டை ஆரோக்கியத்தை உறுதிசெய்கிறது, ஆனால் நான் நிச்சயமாக அந்த சோதனைக்கு தயாராக இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் 2020-ஆம் ஆண்டில் முதன்முறையாக ஒரு பிரத்யேக மகளிர் நிகழ்வாக இருக்கும், ஆண்கள் ATP கோப்பை தொடக்க விழாவுடன் தொடங்கும் இத்தொடர் ஜனவரி 3 முதல் ஒரே நேரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.