Moeen Ali Fined:  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தனது பந்துவீச்சு கையில் ஈரத்தை உலர்த்தும் மருந்து போன்ற பொருளை நடுவர்களின் முன் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகள் 2.20 ஐ அலி மீறியது கண்டறியப்பட்டது. இது விளையாட்டின் நேர்மைக்கு முரணான நடத்தையை வெளிப்படுத்துவது தொடர்பானது" என்று ஐசிசி இதுகுறித்த வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தவிர, அலியின் ஒழுக்காற்று பதிவில் ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதுய. அவருக்கு இது 24 மாத காலப்பகுதியில் முதல் குற்றமாகும்.



2ஆவது நாளில் ஆஸ்திரேலியா பேட்டிங்கின் 89வது ஓவரில், அடுத்த ஓவரை வீசுவதற்கு முன் மொயீன் அலி தனது பந்துவீச்சு கையில் ஈரத்தை உறிஞ்சும் மருந்து போன்ற பொருளை பவுண்டரி லைனுக்கு அருகே பயன்படுத்தினார். இதை பார்த்த போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அலிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க | அம்மாடி... கிங் கோலியிடம் எத்தனை கோடி சொத்து இருக்கு தெரியுமா?


அவருக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. நடுவர்களின் முன் அனுமதியில்லாமல், வீரர்கள் தங்கள் சொந்த விஷயங்களுக்காக எதையும் பயன்படுத்தக் கூடாது என்ற தொடருக்கு முந்தைய அறிவுறுத்தல்களை மீறி இந்த சம்பவம் நடந்தால் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மொயீன் அலி இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் அந்த மருந்து போன்ற பொருளை கைகளில் பயன்படுத்தினாரே தவிர பந்தின் மீது பயன்படுத்தவில்லை. எனவே அவரிடம் விசாரணை தேவையில்லை. வீரரை அனுமதிக்கும் முடிவை எட்டியதில், ஆட்ட நடுவர் அலி தனது கைகளை உலர்த்துவதற்கு மட்டுமே ஸ்ப்ரேயைப் பயன்படுத்தினார் என்பதில் உறுதியாக இருந்தார்.



கள நடுவர்கள் அஹ்சன் ராசா மற்றும் மரைஸ் எராஸ்மஸ், மூன்றாவது நடுவர் கிறிஸ் கஃபனே மற்றும் நான்காவது நடுவர் மைக் பர்ன்ஸ் ஆகியோர் இக்குற்றச்சாட்டை சுமத்தினர். நிலை 1 மீறல்களுக்கு உத்தியோகபூர்வ கண்டனத்தின் குறைந்தபட்ச அபராதம், ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு குறைபாடு புள்ளிகள் விதிக்கப்படும்.


இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 393 ரன்களை எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா 387 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியுள்ளது. தற்போது 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி மூன்றாம் நாளான இன்று தனது இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கை மேற்கொண்டு வருகிறது.  


மேலும் படிக்க | மார்னஸ் லாபுசாக்னேவை கோல்டன் டக்கில் ஆட்டமிழக்கச் செய்த பிராட்! விக்கெட் எடுத்த ரகசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ