பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட இருக்கிறது. அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலக கோப்பை லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தாலும், அந்நாடு இந்தியாவில் வந்து விளையாடுவதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை கொடுக்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து, அந்த நாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களை உறுதி செய்த பின்னரே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு வருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் பந்துவீச்சாளரான சயீத் அஜ்மல் ஒரு பெரிய தகவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக விளையாடாமல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தால் நிச்சயம் தான் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் என்றும், ஆனால் அதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு பல முட்டுக்கட்டைகளை போட்டுவிட்டனர் என்றும் ஆதங்கமாக பேசியுள்ளார். 


மேலும் படிக்க | 10000 பெண்களுடன் உடலுறவு கொண்டதாக தம்பட்டம் அடித்த விளையாட்டு வீரர் மீது வழக்கு


சயீத் அஜ்மல் புலம்பல்


பாகிஸ்தான் அணியின் ஸ்டார் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார் சயீத் அஜ்மல். உலக கிரிக்கெட்டில் அபாரமான பந்துவீச்சாளராகவும் இருந்த அவரின் பந்துவீச்சில் திடீரென சந்தேகம் ஏற்பட்டதால் அவருக்கு ஐசிசி தடை விதித்தது. தடை விதிக்கப்படும்போது சயீத் அஜ்மல், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளராகவும் இருந்தார். 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் சயீத் அஜ்மல் வீழ்த்தியிருந்தார். 


ஆயிரம் விக்கெட் வீழ்த்தியிருப்பேன்


நாதிர் அலியின் போட்காஸ்டில் சயீத் அஜ்மல் பேசும்போது, " உண்மையைச் சொல்வதானால், நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருந்தால், ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன். நான் ஒரு பந்து வீச்சாளராக ஒவ்வொரு ஆண்டும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன். ஐசிசி தடை விதித்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் பந்து வீச்சில் சந்தேகம் இருந்தால் நான் 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கியபோது என்னை தடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து 400 விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்தபிறகு எனக்கு தடை விதித்தை எப்படி ஏற்றுக் கொள்வது.


சச்சின் விக்கெட் மறக்க முடியவில்லை


இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது பல மறக்க முடியாத நினைவுகள் இருக்கின்றன. அதில் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் விக்கெட்டை எடுத்தேன். அவர் என்னுடைய பந்தில் ஆட்டமிழந்ததை என்னால் மறக்க முடியாது. ஆனால் மூன்றாவது நடுவர் அதனை அவுட் இல்லை என கூறினார். இதனை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை அது அவுட் தான்" என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் இந்திய வீரர்... இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ