T20 World Cup: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார். தான் தேர்வு செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் அவர், என்னிடம் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. எதிர்வரும் போட்டிகளில் கவனம் செலுத்தி இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷர்துல் தாக்கூர் ஏமாற்றம்


இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இப்போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ஷர்துல் தாக்கூர் தன்னுடைய மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார். " 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது நிச்சயமாக மிகப்பெரிய ஏமாற்றம். 


மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!


உலகக் கோப்பையில் விளையாடி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். நான் செலக்ட் ஆகாவிட்டாலும் பரவாயில்லை. என்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையும் உள்ளது. அதில் இடம்பிடிக்க எந்தப் போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் கவனம் செலுத்துவேன்" எனத் தெரிவித்துள்ளார்.


ஷர்துல் தாக்கூருக்கு இருக்கும் வாய்ப்பு


20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைந்து பயணிப்பதற்கு ஷர்துல் தூக்கூருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பிசிசிஐ தேர்வர்கள் மனது வைத்தால் மட்டுமே அது நடக்கும். ஏனென்றால், இந்திய அணியின் ரிசர்வ் பிளேயராக அனுப்பி வைக்கப்பட்ட தீபக் சாஹர் காயமடைந்துள்ளார். இதனால் அவர் அணியில் இருந்து வெளியேறும்பட்சத்தில் மாற்று வீரர் ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார். அந்த இடத்துக்கு ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 


வாய்ப்பை எதிர்நோக்கும் தாக்கூர்


இதுகுறித்து ஷர்துல் தாக்கூரிடம் கேட்டபோது, " யாராவது காயம் அடைந்தால், அவருக்குப் பதிலாக எந்த வீரரும் வரலாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் மனதளவில் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


ஷர்துல் தாக்கூர் ரெக்கார்டு


ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா இல்லாதபோது இந்திய அணியில் இடம்பிடித்தார். அவருக்கு பல்வேறு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. குறிப்பாக அவருடைய பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டி விளையாடும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் அவருடைய பேட்டிங் கவனிக்க தக்க வகையில் இருந்தது. 


மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதும் போர்'களம்' ரெடி; ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ