புதுடெல்லி: பிசிசிஐ (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி என்று தகவல்கள் வந்துள்ளன. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தற்போது வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என பிசிசிஐ டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.



மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் (Kolkata) மருத்துவமனையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.



கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் (Woodland Hospital) அனுமதிக்கப்பட்டார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் முதற்கட்ட தகவல்களை தெரிவித்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் முழு விவரங்களும் வெளியாகும். 



சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Also Read | T Natarajan-ஐ பாராட்டிய முன்னாள் கிரிக்கெட்டர்


 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR