பங்களாதேஷ் நட்சத்திர வீரரான சப்ரிக் ரஹ்மான் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் டோனியுடனான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் இந்திய கேப்டன் டோனி 'உலக லெஜண்ட்' என்று குறிபிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சப்ரிக் ரஹ்மான் அக்டோபர் 20, 2016 இல் பங்களாதேஷ் அணியில் அறிமுகமானார் மற்றும் எதிர்காலத்தில் பங்களாதேஷ் அணியின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அளவிற்கு மகத்தான தாக்கத்தையும் திறனையும் காட்டி வருகிறார்.


25 வயதான சப்ரிக், டோனி உடனான அவரது சமீபத்திய சந்திப்பில் எடுத்துக்கொண்ட  ஒரு படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். 



இதுகுறித்து அவர் கூறுகையில் "நாங்கள் இந்திய வீரர்களுடன் ஒரு நல்ல உறவை கொண்டுள்ளோம். பர்மிங்காம் நகரில் எங்களுக்கு இடையேயான கடைசி போட்டியின்போது நாங்கள் அவர்களுடன் பேசினோம். யுவராஜ் என்னுடைய இன்னுமொரு நல்ல நண்பராவார். என கூறினார்.