Tokyo Olympics 2020: டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அபார வெற்றிப் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேலின் போலிகர்போவை எதிர்த்து ஆடிய பிவி சிந்து தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்தார்.  முதல் செட் போட்டியில்  21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட் போட்டியில் 21-10 என்ற கணக்கிலும் வென்று போலிகர்போவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.


உலகில் உள்ள அனைத்து வீரர்களின் உட்சபட்ச கனவு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது, பதக்கம் வெல்வது. 2020 ஆம் ஆண்டு நடக்கவிருந்த இப்பெருமைமிகு விளையாட்டு திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணாமாக ஓராண்டு கழித்து, நேற்று துவங்கியது.  


ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு


இந்தியாவில் இருந்து 125 வீரர்கள்:


இந்தியா சார்பில் 125 வீரர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அதில் நாடு முழுவதிலும் இருந்து 18 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர். 


தமிழக வீராங்கனை மற்றும் வீரர்கள்:


தமிழக வீராங்கனைகள்:  பவானி தேவி, இளவேனில் வாலறிவன், சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆவார்கள். 
தமிழக வீரர்கள்: சரத் கமல், சத்யன் ஞானசேகரன், விஷ்ணு, நேத்ரன் குமரன், ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டி உள்ளிட்ட பங்கேற்கின்றனர். 


ALSO READ | Tokyo Olympics 2020: ஒலிம்பிக்கில் சாதிக்க போகும் தமிழக தங்கங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR