இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆச்சர்யமான வீடியோவை பதிவிட்டுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் ஒரு மரத்தின் கீழ் வயதான ஒரு பெண்மணி ஊஞ்சலாடும் ஒரு அற்புதமான வீடியோவை பகிந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு வயதான பெண்மணி ஒருவர் ஆரஞ்சு நிற ஆடையணிந்து குழந்தை போல் வேகமாக ஊஞ்சலாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


இன்றும் நம்மில் சிலருக்கு ஊஞ்சலை கண்டால் பயம் இருக்கும். அதில் விளையாடும் போது தலை சுற்றும் என்று பல காரணத்தினால் அதை தவிர்த்து வருகிறோம். ஆனால், இந்த வீடியோவில் அந்த வயதான பெண்மணி ஊஞ்சலில் நின்றபடி வேகமாக ஆடுவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதுமட்டும் இன்றி அவர் 1992-ல் பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார், ரோஜா நடித்துள்ள சூரியன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான " பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட; பனி கொட்டும் இரவு..பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட; கங்கை போலே காவிரி போலே; ஆசைகள் ஊறாதா; சின்னப் பொண்ணு.. செவ்வரி கண்ணு; ஜாடையில் கூறாதா; பதினெட்டு வயது இளமொட்டு; மனது ஏங்குது பாய் போட என்ற பாடல் வரிகளுக்கு அந்த பாட்டி வேகமாக ஊஞ்சலாடுவது அனைவரையும் கவந்துள்ளது. 


வயது என்ன பெரிய விஷயமா; அது வெறும் நம்பர் மட்டும் தான் என்பதை நேரூபித்துள்ளது இந்த பாட்டி. நாம் எப்படி பட்ட வாழ்கையை வாழவேண்டுமோ அதை நீ நினைத்தபடி வாழு என்ற கருத்தை இந்த வீடியோவில் தெரிவாக உணர்த்தியுள்ளது இந்த பாட்டி.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம விரலாக பரவிவருகிறது. 


இதோ அந்த வீடியோ காட்சி உங்களுக்காக........!