நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது.  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.  நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று உள்ளது.  ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியுள்ளது.  இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் கூட்டணி சிறப்பாக விளையாடியது.  ஹர்ஷல் படேல் சிறப்பாக பந்து வீசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ டிராவிட் தலைமையில் சாதித்துக் காட்டிய இந்திய அணி!


ஐபிஎல் சிறப்பாக விளையாடிய வெங்கடேஸ் ஐயர், ருத்ராஜ், ஆவேஸ் கான், ஹர்ஷல் படேல் போன்றோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வெங்கடேச ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது.  இதனையடுத்து இந்திய அணி தொடரை வென்றுள்ளது மீதமுள்ள வீரர்கள் கடைசி போட்டியில் விளையாடுவார்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.  அந்தவகையில் இன்றைய போட்டியில் ராகுலுக்கு பதிலாக ருத்ராஜ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆவேஸ் கானும் இந்திய அணிக்காக தனது முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளார்.  



மேலும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத சஹல் மற்றும் இஷான் கிசன் இன்று விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உலக கோப்பை பைனலில் தோல்வியுற்று நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரையும் தோல்வியடைந்துள்ளது. 


ALSO READ டி20 தொடரில் இருந்து விராட் கோலி விலகியது சரியான முடிவா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR