பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.


புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பெற்ற டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக பைனலுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.


மூன்று முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 7-வது முறையாக இறுதிப்போட்டியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. இன்றைய போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


2-வது அரை இறுதி ஆட்டம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியா- நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதுகின்றன.