தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், நடிகைகள் தங்கள் கர்ப்பினை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது. தெலுங்கு திரையுலகில் திறமையான நடிகைகள் இருந்த போதிலும், மும்பையில் இருந்து நடிகைகள் கொண்டுவரப்படுவது இதற்காக தான் என குற்றம் சாட்டினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரின் குற்றசாட்டை அடுத்து, தெலுங்கு திரைத்துறை சங்கம் இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான உரிமத்தினை ரத்து செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டார்.


அப்பொழுது செய்தியாளர்களிடம், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபலங்களை பற்றி விவரங்களை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


நேற்று பாகுபலி புகழ் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஸ்ரீ ரெட்டியுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.


இந்த பரபரபப்பு அடங்குவதற்குள், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல தெலுங்கு எழுத்தாளரின் பெயரை அறிவித்துள்ளார். 


பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் என்பவர் பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி என்னை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறியுள்ளார். 


ஸ்ரீ ரெட்டியின் குற்றசாட்டை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோனா வெங்கட், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்ததுள்ளார்.


இன்னும் இரண்டு பிரபலங்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஸ்ரீ ரெட்டி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.