காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அந்த திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின். புதுமணத் தம்பதிகளுக்கு திருநாவுக்கரசர், திருமாவளவன், கீ.வீரமணி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 


விடுதலை கட்சியை சேர்ந்த விழுப்புரத்தை சேர்ந்த தொண்டர் ஒருவரது  திருமணத்தை வி.சி. தலைவர் திருமாவளவன் நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்த திருமண தம்பதியின் குடும்பத்தினர் விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்தனர். அதைத்தொடர்ந்து, ஸ்டாலின், திருமாவளவன் உள்பட தலைவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் திருமணம் நடந்தேறியது.