தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக குடும்பநலம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி அவசரகால ஆம்புலன்ஸ் சேவையான 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கான பணியில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தங்களுக்கு 30% போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில், நவம்பர் 5 ஆம் நாள் முதல் நவம்பர் 8 ஆம் நாள் வரையும் வேலைநிறுத்ததில் ஈடுபடுவோம். அதன் பிறக்கும் எங்கள் கோரிக்கை ஏற்க்கவில்லை என்றால், பின்னர் காலவரையறை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


விரைவில் இதுக்குறித்து அரசு ஆலோசனை செய்ய உள்ளது என தகவல் வந்துள்ளது.