டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதல் அமர்வு தலைமை நீதிபதிகள் கூறியதாவது:-


டிஎன்பிஎஸ்சி-ன் 11 பேரது நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நியமன ஆணை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார். மேலும் உரிய விதிகளைப் பின்பற்றாமல் நியமனங்கள் நடந்ததாகவும் நீதிபதிகள் கூறினார்கள்.


டிஎன்பிஎஸ்சிக்கு கடந்த பிப்ரவரியில் எம்.ராஜாராம் ஐஏஎஸ், வழக்கறிஞர்கள் ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பொறியாளர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்