டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கிக்கொண்டதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இதற்க்கு யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.


இந்நிலையில், அவர்கள் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இதனை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி துரைசாமி அனுமதி அளித்தார். தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை, நாளை திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.


எம்எல்ஏக்கள் தங்கள் மனுவில், அதிமுகவில் இருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ இல்லை. கட்சி மாறாத நிலையில், எங்கள் மீது கட்சி தாவல் சட்டம் செல்லாது. சபாநாயகர் முடிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.