சென்னையில் கூடுதலாக 200 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, இந்த சிறப்பு நடமாடும் மழைக்கால மருத்துவ முகாமை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


ஏற்கனவே 401 சிறப்பு மருத்துவ முகாம்கள் செயல்பட்டுவரும் நிலையில், மக்களின் நலனுக்காக கூடுதலாக 200 நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


200 நடமாடும் மருத்துவ முகாமை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.