கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேரி பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு இந்த பள்ளியில் சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த பள்ளியில் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இந்த பள்ளியில் உள்ள மாணவ மற்றும் மாணவிகளுக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் கொரோனா (Coronavirus) பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையில் 3 மாணவிகள் 1 மாணவர் என மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாம் கட்டமாக 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மாணவ மற்றும் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


ALSO READ | டெல்டாவை விட வேகமாக பரவும் ஒமிக்ரான்: WHO எச்சரிக்கை


இந்த பரிசோதனையில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அப்பள்ளிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தற்போது சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


ALSO READ | omicron: 3 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு ’ஒமிக்ரான்’


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR