இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 தமிழக மீனவர்களை நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு, இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் 77 தமிழக மீனவர்களை நேற்று விடுதலை செய்தது.