சேலம் அருகில் இளம்பெண் மீது மர்ம நபர் ஆசிட் வீச்சு...
கணவரை பிரிந்து வாழும் காயத்ரி மீது அமிலத்தை வீசி விட்டு தப்பிய சீனிவாசனை போலீஸ் தேடுகிறது....
கணவரை பிரிந்து வாழும் காயத்ரி மீது அமிலத்தை வீசி விட்டு தப்பிய சீனிவாசனை போலீஸ் தேடுகிறது....
சேலம் குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த 31 வயதுடைய காயத்திரியும் எஸ்.பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகனும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதால் காயத்திரி தனது குழந்தைகளுடன் குகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் இன்று காலை 9 மணிக்கு 2 மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக காயத்திரி அழைத்து சென்றுள்ளார். குகை மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது, மர்ம நபர் ஒருவர் திடீரென வழிமறித்து காயத்திரியின் முகத்தில் ஆசிட்டை வீசினார்.
இதில் காயத்திரியின் முகத்தின் வலது பக்கம், நெஞ்சு பகுதி, கால் பகுதி வெந்தது. ஆசிட்டை ஒரு புறமாக மர்ம நபர் வீசியதால் அது மெல்ல மெல்ல உடலின் ஒரு பக்கமாக பரவியது. இதையடுத்து, பொதுமக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து காயத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயத்ரி மீது அமிலத்தை வீசி விட்டு தப்பிய சீனிவாசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.