மே தினத்தன்று செல்வி ஜெயலலிதா தேர்தல் பேரணியில் உரையாற்றியது.ஞாயிறன்று தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது அரசாங்க ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு அனைத்து வகையான நன்மைகள் கிடைக்க எனது அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் Rs.568 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திருக்கிறது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆளும் அதிமுக பொது செயலாளர் இந்த ஜெயலலிதாவும் தனது அரசாங்கம் 2011ல் கூறப்பட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமில்லாமல் கடந்த தேர்தலில் அறிக்கையில் இல்லாத திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன என்றார்.


ஆனால் அவர் முந்தைய அரசான திமுக அரசு 2006ல் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.


மேலும் ஜெயலலிதா கூறியது கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது அரசாங்கம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த படும் என்றும் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினர்.


வரும் மே மாதம் 16ம் தேதி தேர்தல் நாள். மறக்காமல் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.