மதுரையில் காலமான அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். மதுரை ஜெய்ஹிந் புரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்நிலையில் தற்போது பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்துவதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பழனிசாமி ஆகியோர் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்-ன் இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 


மேலும், அவர்களுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 


மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணியளவில் நடக்குள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.