கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. அதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.


மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றுங்கள், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி ஏன் தரப்பட்டது? என கேள்வி எழுப்பி, அரசை விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில், இன்று சென்னையில் அதிமுக ஆதரவாளர்கள், அதிமுக- வின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி ‌வருகின்றனர். மேலும் அவரது கொடும்பாவி எரித்து போராட்டம் நடந்தினர்.