மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான்; வேறு எந்த கட்சியும் இல்லை....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில அரசின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிப்பெட் ஆண்டு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில் அமைக்கப்பட்டது என்றார்.


ஆணைய விசாரணையில் தலையிடுவது அரசின் பணி அல்ல எனவும் குறிப்பிட்டார். மக்களுக்காக குல் கொடுப்பவர்களுக்கு அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருப்பதாகவும் ஆனால், தனிநபர் கருத்தை விட செயற்குழு, பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான்; வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.