சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்லாவரம் சாவடி தெருவை சேர்ந்த நாகராஜ், ஜெயலலிதா பேரவை நகர துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் எல்.ஐசி இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்து ஏல சீட்டும் நடத்தி வந்ததாக தெரிகிறது. 


இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.