வரும் 30 ஆம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை - நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் வருகிற 30 ஆம் தேதி மாலை நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.


திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு, நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை, அமித்ஷா ஏற்றுக்கொண்டார். எனவே, கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அகில இந்திய தலைவர்கள் பலரும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். 


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாடு செல்வதால், அவருக்கு பதிலாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.