சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தாலும் மயிலாப்பூர் நட்ராஜ், கோவை வடக்கு அருண்குமார் ஆகியோர் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் 122 ஆக குறைந்துள்ளது. 


இன்று சட்டசபையில் நடக்கப் போகும் நம்பிக்கை ஓட்டெடுப்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே ஆதரவாக இருக்கும் என மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


மேலும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் தங்கள் அணிக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.