வைரஸ் தடுப்பு கிருமிநாசினிகளை பயணிகளுக்கு தெளிப்பதற்காக ஆவடி கார்ப்பரேஷன் வியாழக்கிழமை இரண்டு கிருமிநாசினி சுரங்கங்களை அறிமுகம் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற மேலும் ஆறு சுரங்கப்பாதைகள் விரைவில் இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆவடி கார்ப்பரேஷன் ஆணையர் தெரிவித்தார். மக்கள் இந்த கிருமிநாசினை தெளிப்பானை கடந்து செல்லும்போது சுரங்கங்கள் அவர்கள் கிருமிநாசினியை தெளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக புதன் அன்று, சென்னை கார்ப்பரேஷன் திருவன்மியூரில் ஒரு கிருமிநாசினி சுரங்கப்பாதையை அறிமுகப்படுத்தியது.


இந்த முயற்சி தற்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது மற்றும் பொதுவாக ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற பிஸியான இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.


முன்னதாக தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் முதன் முறையாக இந்த கிருமி நாசினி பாதை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சுரங்கப்பாதையின் உள்ளே மூன்று முனைகளின் இரண்டு தொகுப்புகள் உள்ளன, அவை 1% சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலை மக்கள் நடக்கும்போது தெளிக்கின்றன. மேலும் இந்த கிருமிநாசினிகள் "[மேற்பரப்பில்] தொடர்பு கொண்டபின், வைரஸைக் கொல்லும் அளவுக்கு இது திறமையானது" என்று கூறப்படுகிறது. வழக்கமான கை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இது ஒரு துணையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.