அதிமுக-வின் இரு அணிகளையும் வைத்தும் தமிழகத்தில் வளரும் அளவுக்கு பாஜக இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-


காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை, தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளை வைத்து வளரும் நிலை பாஜகவுக்கு கிடையாது. 


கோடநாடு உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை. 


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.