Tamil Nadu Holiday Request On January 22: கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பாஜக சின்னத்தை சுவற்றில் வரையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'தமிழகத்திற்கு பெருமை'


இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது பாஜகவின் சின்னமான தாமரையை வரைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் வரைந்து வருகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் இன்று இந்த பணிகளை துவக்கி வைத்துள்ளேன்.


தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு கோவில்களில் பிரதமர் வழிபாடு செய்கிறார். ராமருக்கும் தமிழகத்திற்கும் பாரம்பரியம் மிக்க, கலாச்சார ரீதியான இணைப்பு உள்ளது. இங்கு வழிபாடு செய்து அயோத்திக்கு பிரதமர் செல்வது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாகும். அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும், முதல்வரும் கலந்து கொள்வது இயல்புதான். அதை கூட்டணி என பார்க்க முடியாது.


மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...


தமிழ்நாட்டில் விடுமுறை?


மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான தொகையை உடனடியாக பிரதமர் கொடுத்துள்ளார். அவர்  தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி, கொடுக்க வேண்டிய அக்கறை இவை இரண்டையும் பிரதமர் கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.


ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டிதான் உரிய பணிகளை செய்தது. அனைத்தையும் தேர்தலோடு தொடர்பு படுத்த முடியாது. நாட்டில் எப்போதும் ஏதாவது தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கும். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.


பிரதமர் மோடி தமிழக பயணம்


மேலும், "திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியல் இனப்பெண் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சி எம்எல்ஏ என்பதால் அப்படியே விட்டுவிடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்" என  தெரிவித்தார். 


பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழகம் (PM Modi TN Visit) வந்தார். நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடரை தொடக்கிவைத்தது மட்டுமின்றி, பெயர் மாற்றம் செய்யப்பட்ட டிடி தமிழ் சேனலின் புதிய லோகோவையும் அறிமுகம் செய்தார். மேலும், 12 பண்பலை அலைவரிசைகளுக்கான பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இரவு தங்கினார்.


மேலும் படிக்க | ராமர் கோவில் பிரசாதம், விஐபி பாஸ் என களைகட்டும் மோசடி! முழுப் பின்னணி!


ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி


தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டார். திருச்சியில் இன்று பிறபகல் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடமாக ஸ்ரீரங்கம் திகழ்கிறது. மேலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி (PM Modi In Rameshwaram) கோவிலில் இன்று தரிசனம் மேற்கொள்கிறார். அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்திற்கு இரவு தங்குகிறார். zeenews.india.com/tamil/tamil-nadu/modi-welcomed-with-raja-banners-in-srirangam-484054


நாளை காலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்ல உள்ளார். பின்னர், அங்கு கோதண்டராமசுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து பூஜை செய்து கடலில் இருந்து தீர்த்தம் எடுக்கும் பிரதமர் மோடி நாளை மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு நேரடியாக செல்கிறார்.


பல மாநிலங்களில் விடுமுறை


வரும் திங்கட்கிழமை உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா (Ramar Temple Pran Pratishtha) நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார். இதற்காக பிரதமர் மோடி விரதத்தில் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்திக்கு செல்லும் முன் அவர் தமிழகத்திற்கு வருகை தந்து பல ஆன்மீக தளங்களுக்கு சென்றிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


மேலும், ராமர் கோவில் கும்பாபிஷேகம் (Holiday For Ramar Temple Pran Pratishtha) நடைபெற்ற ஜன.22ஆம் தேதி  உத்தரப்பிரதேசம், கோவா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. மேலும், மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவைக்கு அன்றைய நாள் அரை நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. தென்மாநில பிரதேசங்களில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மட்டுமே விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வலதுசாரி இயக்கத்தினர் விடுமுறை வேண்டி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கையை முன்வைக்கின்றனர். 


மேலும் படிக்க | Ramar Temple: ஜன. 22 அன்று தேசிய விடுமுறை? - குடியரசு தலைவருக்கு பறந்த கடிதம் - விரைவில் அறிவிப்பா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ