சென்னை: நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.


முதல்வர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டப் பிறகு நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது. இந்த கூட்டத்தில், காவிரி நீர் விவகாரம் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரிகள் நியமனம் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.