புதுடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்ககூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக இடையே ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் நடைபெறுகிறது.


இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழகத்திற்கு தர வேண்டிய காவேரி நீர் குறித்து விவாதிக்க உள்ளனர்.