அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’  படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100_வது படமாக தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.130 கோடியில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’  படத்த்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி, இதுவரை 1 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.


இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்தகூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்த மாதம் 3-ம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என தடை விதித்து ஆணை பிறப்பித்தது. மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம.