புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓட்டுநர், பயணிகள் மற்றும் வாகன உரிமையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வரை இந்த Bumper-to-bumper Insurance காப்பீட்டு திட்டத்தை நீடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், செப்டம்பர் 1 ம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உயர் நீதி மன்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


ALSO READ | Auto Insurance விதிகளில் மாற்றம்: பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்றால் என்ன..!!


2016 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஒகேனக்கல் பகுதியில் நடந்த சாலை விபத்து தொடர்பான மரணத்தில், ஈரோட்டில் உள்ள வாகன விபத்து இழப்பு காப்பீட்டு தீர்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், ரூ.14,65,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.


காப்பீட்டு நிறுவனத்தின் வாகன காப்பீட்டு பாலிசி ஒரு 'சட்ட பாலிஸி' மட்டுமே என்று வாதிட்டது. அதாவது இந்த பாதுகாப்பு மூன்றாம் தரப்பினரால் வாகனத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும், வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அல்ல என வாதிட்டது.


இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்ட, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெற்று பிறகு இந்த நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என கோரி, பொது காப்பீட்டு மன்றம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையை மேற்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், பொதுக் காப்பீடு மன்றத்தின் இந்த கோரிக்கையை ஏற்று தனது முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


ALSO READ | Top 7 Mid Size SUV: உங்கள் பட்ஜெட்டுக்குள் கச்சிதமாய் பொருந்தும் அட்டகாசமான கார்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR