தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு, கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை அடுத்த மூன்று நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...! 


தமிழகத்தில், கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. 


சில இடங்களில், வெப்ப சலன காரணமாக மழை பெய்தது. இந்நிலையில், மீண்டும், மேற்கு திசை காற்று வலுப்பெற துவங்கியுள்ளது. இதனால், தமிழக கடலோர பகுதிகளில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.