அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...! 


தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செஞ்சியில் 7 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, தாமரைப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.