திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணசீட்டு விற்பனை செய்யும் ஊழியராக பணியாற்றுபவர் டிக்காராம். இவர் வழக்கம்போல் இன்று (திங்கட்கிழமை) காலை 4 மணிக்கு பணிக்கு வந்துள்ளார்.  அப்போது திடீரென முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள், டிக்காராமை துப்பாக்கி முனையில் மிரட்டி அலுவலகத்திலிருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஊழியரை கட்டிப்போட்டு ரயில் நிலையத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை


மேலும், டிக்காராமின் கை, கால், வாய் ஆகியவற்றை கட்டியதோடு, டிக்கட் கவுண்டரை பூட்டு போட்டு பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.  அதனை தொடர்ந்து, டிக்கட் கவுண்டரில் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் அளித்த தகவலின்படி திருவான்மியூர் ரயில்வே போலீசார் டிக்கெட் கவுண்டரின் கேட்டினை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, டிக்காராம் கட்டபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டனர்.


இதுகுறித்து, சம்பவ இடத்தில் மோப்ப நாய்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடந்த  டிக்கெட் கவுண்டர் மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் விசாரணையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிக்கராமிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் மூவரும் தமிழில் பேசியதாக தனது வாக்குமூலம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ALSO READ | பூனைக்கு வளைகாப்பு நடத்திய கோவை குடும்பம் !


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR